தோஷம் இருப்பவர்களுக்கு, வழிபாடுகளும் பரிகாரங்களும்

நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன. 

* செல்வ செழிப்புக்கு – தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். 

* கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு – பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும். 

* உடல் நலம் பெற – உப்பு காணிக்கை செலுத்த வேண்டும். 
* விஷத்தன்மை நீங்கிட – மஞ்சள் காணிக்கை செலுத்தலாம். 
* ஆரோக்கிய வாழ்வுபெற – நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தலாம். 
* சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு – தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள் வாங்கி சமர்ப்பிக்கலாம். 
* நீண்ட ஆயுள் பெற – நெய் காணிக்கை செலுத்த வேண்டும்.
* நினைத்த காரியம் கை கூடுவதற்கு – பால், கதலிப்பழம், நிலவறை பாயாசம் நைவேத்தியம் படைக்க வேண்டும். 
* குழந்தை பாக்கியத்திற்கு – மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைக்க வேண்டும். 
* மரங்களின் செழிப்புக்கு – மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் சமர்ப்பிக்க வேண்டும். 
* நாக தோஷ பரிகாரத்திற்கு – மஞ்சள் பொடி காணிக்கை, பால்– பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.