யாழ் .நீர்வேலி கந்தசுவாமிகோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

   
அருள்மிகு  நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் திருக்குடமுழுக்குப் பெருவிழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்று பகல் 12.11 முதல் 2.02 வரையுள்ள சுபவேளையில்
 நடைபெறவுள்ளது..
இதனை முன்னிட்டான எண்ணெய்க் காப்பு நிகழ்வு 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை இடம்பெறவுள்ளது. திருக்குட முழுக்குப் பெருவிழாவையொட்டிய கிரியைகள் 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகவுள்ளன.
.
திருக்குடமுழுக்குப் பெருவிழாவை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக் குருக்கள் நிகழ்த்திவைப்பார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.