திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஆசியாவின் தலை சிறந்த ஆலயம்

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தை ஆசியாவின் தலை சிறந்த ஆலயமாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் புதுடில்லி முதலீட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை(27.01.2018) விசேட விமானம் மூலம் திருகோணமலைக்கு விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். அத்தோடு, திருகோணமலையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களையும் இவர்கள் பார்வையிட்டதோடு, திருக்கோணேஸ்வரா ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் 
கலந்து கொண்டனர்.
மேற்படி குழுவினர் கோணேஸ்வரா ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.