கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

கோயிலில் தூங்கக் கூடாது, தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி
 வரக்கூடாது.குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.கோயிலில் நந்தி 
மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது
.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.மனிதர்கள்
 காலில் விழுந்து
 வணங்கக்கூடாது. கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.படிகளில் உட்காரக் கூடாது.சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.மண் விளக்கு ஏற்றும்
 முன் அவற்றைக் 
கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.கிரணம் இருக்கும் பொழுது கோயிலை வணங்கக் கூடாது.கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.புண்ணிய தீர்த்தங்களில் 
வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.தாம்பூலம் தரித்துக் 
கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.