திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா 30.06.22. ஆரம்பம்

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள்  30.06.2022. அன்று  வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில்
 இடம்பெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள், தர்மபுர ஆதீனத்தினைச் சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது.கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள், தர்மபுர ஆதீன முதல்வர் மீனாட்சி சுந்தரம் தம்பரான், வேத சிவகாம பாடசாலை முதல்வர் சிவசிறி ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
தொடர்ந்து எதிர்வரும் 5 நாட்கள் இக்கிரிகைககள் இடம் பெறும். எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் எண்ணைக் காப்பு சாத்தும்
 நிகழ்வு இடம்பெறும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.