உங்கள் வீட்டில் இந்த 1 செடி இருந்தால் வறுமை என்பதே இருக்காதாம்

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள் என்று சிலவற்றை குறிப்பிட்டு கூறப்படுவது உண்டு. அந்த வரிசையில் யாருமே சேர்க்காத ஒரு செடியும் உண்டு.
இந்தச் செடி மிகுந்த அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய கொடி வகையாக இருக்கிறது. இதை வீட்டில் வளர்த்து வருவதால் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, வறுமை என்பதே ஏற்படாது என்கிறது சாஸ்திரங்கள்.
அப்படியான ஒரு செடி என்ன? அதை நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இந்த ஒரு செடி கொடி போல வளரும் தன்மை கொண்டது. இது படர்ந்து விரிந்து காய்களை பெரிது பெரிதாக கொடுக்கும். இதிலிருக்கும் பூக்கள் தான் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த நுண்ணிய விஷயமாகும்.
 இதைத் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் வாசலில் 
கோலம் போடவும் பயன்படுத்தி வந்ததுண்டு. அந்த காலத்தில் எல்லாம் கோலம் 
போட்டு முடித்ததும் கோலத்திற்கு நடுவில் கொஞ்சம் சாணியை பிள்ளையார் போல பிடித்து வைத்து அதன் மீது இந்த பூவை வைப்பார்கள். அது தான் பூசணிப்பூ என்று கூறுவர்.
வாசலில் சாணியை மொழுகி, வண்ண கோலங்கள் இட்டு, அதன் நடுவில் சாணத்தை அல்லது மஞ்சளை பிள்ளையாராக பிடித்து அந்த பிள்ளையாருக்கு பூசணி பூவை சூட்டி வைத்தால், அந்த வீட்டில் வறுமை 
என்பதே ஏற்படாதாம். வீட்டில் எந்த விதமான நுண்கிருமிகளும்
 நுழையாமல் இருக்கவே சாணம் தெளிக்கப்படுகிறது. அதில் இந்த பூசணி பூவை வைக்கும் பொழுது நல்ல அதிர்வலைகள் ஏற்படுகிறது.
எவ்வளவோ பூக்கள் இருந்தும், ஏன் பூசணி பூவை மட்டும் வைத்தார்கள்? பூசணிப்பூ எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தாவர வகையாக இருக்கிறது. உங்களிடம் 
இடம் இருந்தால் 
கண்டிப்பாக பூசணி கொடியை வளர்த்து வாருங்கள். அதிலிருந்து ஒவ்வொரு பூக்களையும் தினமும் நீங்கள் கோலம் போடும் பொழுது நடுவில் இது போல வையுங்கள். சாணம் தெளிக்காவிட்டாலும் பூசணி பூவை வைப்பதற்கு என்று கொஞ்சம் சாணத்தை எடுத்து வையுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது, குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அது கண்களுக்கு தெரியாமல் நீங்கி விடுமாம். அந்த அளவிற்கு மகாலட்சுமி கடாட்சத்தை பெருக செய்யக்கூடிய
 இந்த பூசணிப்பூ பரிகாரம், மிகுந்த சக்தி 
வாய்ந்ததாகும். 
மேலும் பூசணி பூ கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகம் பூக்கக் கூடியது. பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பூசணிப் பூ இந்திரனுக்கு விருப்பமான பூவாக இருக்கிறது.
அதிர்ஷ்ட தேவதையாக கருதப்படும் இந்த பூசணிப் பூ இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வமழை பொழியுமாம். இந்திர சம்பத்து ஏற்படுவதற்கு இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்
படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய இந்த பூசணி பூவை திருஷ்டி தோஷங்களை போக்க தலைவாசலில் கட்டி தொங்க 
விடவும் செய்யலாம். அமானுஷ்ய சக்திகள் அனைத்தையும்
 ஈர்த்து இழுக்க கூடிய இந்த அதிசக்தி வாய்ந்த பூசணிப்பூ உங்கள் வீட்டிலும் வளர்த்து பல்வேறு அதிர்ஷ்ட யோகங்களை 
நீங்களும் பெறலாமே!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.