எங்கள் .சைவமும் தமிழும் ஓங்கட்டும்
சரித்திரம் உலகில் மீட்கட்டும்
சித்தர்கள் எண்ணம் சிறக்கட்டும்
சீமையை தமிழே ஆழட்டும்
தெய்வ தமிழில் வணகிடுவோம்
தேவாரத்தை ஓதிடுவோம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பாட்டன் பாட்டி வளி காப்போம்
பைந் தமிழில் மொழியில் வழிபடுவோம்
அன்பே சிவமாம் அறிந்திடுவோம்
அப்பன் வழியில் அதை வெல்வோம்
சமய குறவர் வளி நிற்போம்
இமயம் வரையும் அதை வைப்போம்
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம்
சிவாய நாம ஓம் சிவாய நாம ஓம்
சைவம் எமது வழியாகும்
செந்தமிழ் எமது மொழியாகும்
தமிழர் கோவில் தலம் தோறும்
தமிழர் மொழியில் குட முழுக்கு
இறைவன் மொழியே தமிழாகும்
இதற்க்கு அவனே போருளாகும்
நீறை பூசு நோய் போகும்
நிமிர்ந்து பாடு பேய் ஓடும்
பாரில் வாழும் பழைய மொழி
பைந்தமிழ் தொன்மை அதன் சாட்சி
பாட்டன் கட்டிய கோவிலிலே
பரம்பரை நாமே பூசை செய்வோம்
சிவனே விரும்பிக் கேட்ட மொழி
சீமை தோறும் ஆண்ட மொழி
சைவத் தமிழாய் சபை விரிப்போம்
சரித்திரம் புகழ விதை விதைப்போம் .என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen