|
|
|
30 யூலை 2012, |
உடல்நலம் பாதிப்பில் இருந்து மீள
சாப்பிடும் சில மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
அதிலும் சில மிகவும் அபாயகரமானதாக இருக்கின்றன. அந்த வகை பட்டியலில் போதை தரும்
மாத்திரைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் போதை தரும்
மாத்திரைகள் ஞாபக சக்தியை குறைத்து விடும் என கண்டுபிடித்துள்ளனர்.
இதை உபயோகப்படுத்துவோருக்கு தொடக்கத்தில் அதிக மாற்றம் தெரியாது. கொஞ்ச நாள்
கழித்து தான் அதன் வீரியம் தெரியவரும் என்றும், புதிதாக உபயோகிப்போர் 10 மாத்திரை
அல்லது அதற்கு மேல் சாப்பிட்டதுமே உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றும்
எச்சரிக்கை விடுக்கிறார்கள் |
|
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen