வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையின் வட மாகாணத்துக்கு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை, அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு நீக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது.
எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை சீரடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.