இருபது வகையான முருகப்பெருமானுக்கான காவடிகளும் அதன் பலன்களும்

முருகப்பெருமானின் மூலம் அருள்கிடைக்க பலரும் பல வகையான காவடிகள் எடுத்து அவரவர் தேவைகளை ஈடுசெய்வர். முருகப்பொருமானுக்கு இருபது வகையான காவடிகள் உண்டு. 
நாம் இந்தக் காவடிகளின் வகையையும் அதன் பலன்களையும் இன்று பார்ப்போம்.
தங்க காவடி 
நீடித்த புகழையும், 
வெள்ளிக் காவடி
 நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. 
பால்க் காவடி 
செல்வ செழிப்பையும், 
சந்தனக்காவடி 
வியாதிகளை நீக்கியும்,
பன்னீர்க் காவடி 
மனநல பாதிப்புகளை நீக்கியும் அருள்கிறது. 
சர்க்கரைக் காவடி 
சந்தான பாக்கியம்,
 அன்னக்காவடி 
வறுமை நீக்கும், 
இளநீர்க் காவடி
 சரும வியாதி போக்கும், 
அலங்காரக் காவடி 
திருமணத்தடை நீக்கும், 
அக்கினிக் காவடி
 பில்லி, சூனியம் செய்வினை அகற்றும்.
சர்ப்பக் காவடி 
குழந்தை வரன் அளிக்கும்.
 கற்பூரக் காவடி
 பூரண ஆரோக்கியம் அருளும்.
 தேர்க்காவடி
 உயிராபத்துகள் நீக்கும்
மச்சக் காவடி
 இறையருளுக்கு நன்றி தெரிவிக்க, 
மஞ்சள் காவடி
 நீதி, நேர்மையான தீர்ப்பு கிடைக்க, 
 சேவல் காவடி
வாழ்வில் வெற்றிகளை குவிக்க, 
 பழக்காவடி 
எதிரிகள் தொல்லை நீங்க, செய்யும் தொழிலில் வெற்றியை பெற, 
மயில் காவடி 
இல்லத்தில் இன்பம் நீடித்திருக்க, 
புஷ்ப காவடி 
எடுப்பது நினைத்ததை நடத்தி முடிக்கும்.
 வேல் காவடி 
எதிரிகளை நடுநடுங்க வைக்கும் வேலனின் பூரண அருளும், 
வீரமும் கிடைக்க செய்யும்.என்பதாகும்


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.