வீட்டில் இருந்தவாறே மருத்துநீர் தயாரித்து நீராடுவது எப்படி

13/04/2020 திங்கள்கிழமை வாக்கியபஞ்சாங்கம் இரவு 7.26, திருகணித பஞ்சாங்கம் இரவு 8.23.மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்யும் விஷு புண்ணியகாலம், பிற்பகல் 3.26 முதல் இரவு11.26வரை. சுபநேரம்14/04/2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை (1) 5.00 
முதல் 6.00வரை.
தற்போதையசூழ்நிலையில் கிடைக்கக்கூடியதை மட்டும் வைத்து )நிறம் -சுத்தமான வெண்ணிறஆடை,தரிசனம், நிறைகுடம், கண்ணாடி, தீபம், வலது உள்ளங்கை, பூக்கள், பழவகை, மஞ்சள், குங்குமம், சந்தணம், வெற்றிலை, பாக்கு, பணம்வணங்கி ஆசிபெறவேண்டியது தாய், தந்தை,குரு (எப்போதுமே),மருத்து நீரை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மருத்து நீருக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தலையில் வைத்து நீராட முடியும்.
தாழம்பூ, தாதுமாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகம்புல்,பால்,கோசலம், கோமயம்,கோரோசனை,குங்குமப்பூ, பச்சைகற்பூரம், மஞ்சள், சுக்கு, 
திற்பலி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார்செங்கழுநீர் (இவற்றை சுத்த ஜலத்தில் இட்டு காச்சிய கஷாயமே மருத்து நீராகும்) ஏதாவது மூன்றை மட்டுமாவது கிடைத்தால், காச்சி எடுத்துக்கொள்ளலாம்.
கைவிஷேசம் வீட்டிலுள்ளவர்களுக்கு தந்து மகிழ 14/04/2020  5.20- 5.50 AM. (20/04/2020 12.06-1.46 PM) நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. ஆகவே,தனித்திருப்போம்,விழித்திருப்போம்,
வீட்டிலிருப்போம்.
அனைவருக்கும் இந்த இணையயங்களின்  இனிய 
தமிழ்சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி செல்வகுமாரன் மாலா 10-04,20.


பளையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்   அவர்களுக்கு  -10-04-2020 -இன்று பிறந்தநாள். இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள்சிறியவர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் இவரை சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி சாந்தி ,10.04.20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் 
வசிக்கும் திரு திருமதி பாலமுரளி (முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) 
தம்பதிகளின் இருபத்திஓராவது திருமணநாள் 10.04.2020,,இன்று 
தம்பதியினரை அன்பு.
அம்மாமார்அன்புப் பிள்ளைகள் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளைகள்  மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை
 இல்லறம் என்பது நல்லறமே ..அந்த நல்லறம் என்பது இரு மனமே..அந்த இருமனம் இணைவது.. திருமணமே அந்த திருமணம்..மலர்வது மணவறையில்..
அந்த மணவறை
நினைவுகள்..தொடரட்டுமே..தொடரும்கடவுளின் கருணையால் இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து  பரிவன்போடும் அன்யோன்யமாக வாழ எல்லாம் வல்ல அந்த தெய்வம் உங்களை துணை நின்று
 நடத்தட்டும்..இதுவரை 
இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான
 நாளாக அமையட்டும்
எங்கள்  உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் .வாழ்க்கைவளமுடன்,,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து இரட்டையர்களின் அற்புதராசா இந்துசன்-இந்துசா ,09-04-20

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும் சுவிஸ்-மற்றும்  கனடாவை  . வதிவிடமாகவு​ம் உள்ள .திரு அற்புதராஜா வின் இரட்டையர்கள்  இந்துசன்-இந்துசா (இந்துசன்-சுவிஸ்-தங்கம், கனடா) அவர்களின் பிறந்தநாள் 09-04-2020..இன்று இவர்களை  அன்பு அம்மா மனைவி கணவன் அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் தங்கை, மச்சான் மச்சாள்     மார் ம​ற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார். இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன் ,,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சித்திரை தமிழ் புதுவருடப் பிறப்பும் சார்வரி வருட புத்தாண்டு சுப நேரங்களும்.2020

தமிழ் சார்வரி வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு 
தமிழில் வீறியெழல் என்று பெயர்.
தமிழ் சார்வரி புத்தாண்டில் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது தொட்டதொட்டதெல்லாம் பொன்னாகக்போகிறது. இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.
ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து
 ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மார்கழி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த
 கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.
சார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது. புத்தாண்டு தொடங்கும் போது உங்கள் ராசிக்குள் சந்திரன், கேது, 
இரண்டாம் வீட்டில் குரு, சனி, செவ்வாய், நான்காம் வீட்டில் புதன் ஐந்தாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஆறாம் வீட்டில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.
கவலைகள் தீரும் விகாரி ஆண்டில் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து 
வந்த தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி வருடம் சங்கடங்கள் தீரும் ஆண்டாக இருக்கப் போகிறது. நீங்க தொட்டதெல்லாம் பொன்னானும் நினைத்தது பலிக்கும். நல்ல பண வருமானம் வரும். உங்க குடும்ப வாழ்க்கையில் கவுரவம் வரும். உங்களுக்கு ஏற்பட்டு வந்த பொருளாதார
 நெருக்கடிகள் விலகும். கடன் பிரச்சினைகள் தீரும். கவலைகள் விலகும். சுப காரியங்கள் நடக்கும் இந்த ஆண்டு
 உங்களுக்கு சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். திருமண சுப காரியங்களும் கை கூடி வரும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதே என்ற கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். படிப்படியாக உங்க பிரச்சினைகள் தீரும். குடும்ப ஒற்றுமை
 அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஏழரை சனி ஜென்ம சனியில் இழந்த கௌரவத்தை திரும்ப பெறுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
கால்களில் கவனம் ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. கால் வலிகள் வரலாம் கவனமாக இருங்க. சனிபகவான் வக்ரமடைந்து சில மாதங்கள் கழித்து பின்னர் மீண்டும் நேர்கதியில் செல்வார். வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள் பலர் வேலை இழந்து தவிக்கிறீர்கள். கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். உழைப்பு அதிகரிக்கும் அதற்காக கவலைப்படாதீர்கள்.
பண வரவு சிறப்பு பெண்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் உங்களை பாடாய் படுத்தி வந்தது இனி பிரச்சினை இல்லை. உங்களுக்குஇருந்த நோய் பயம் நீங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் காட்டுங்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளலாம். நல்ல 
மதிப்பெண்களை வாங்குவீர்கள்
கணவன் மனைவி ஒற்றுமை கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். நீங்க
 இழந்த செல்வம் செல்வாக்கினை மீண்டும் பெற தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். கந்த சஷ்டி கவசம் படிங்க நோய் பயம் நீங்கும்
சார்வரி வருடம் தமிழில் வீறியெழல் என்ற பெயர் கொண்ட வருட பிறப்பு
• ஐரோப்பா நேரம் ( Europe Time) 13 April 2020 15:56 மணிக்கு
வருடம் பிறக்கிறது
விஷு புண்ணிய காலம்:
• 13 சித்திரை- 2020 திங்கட்கிழமை முற்பகல் 11:56 முதல் 19:56 வரை
கைவிஷேட சுப நேரம் :
• 13 சித்திரை- 2020 திங்கட்கிழமை 16:11 மணி முதல் 17:30 வரை
• 13 சித்திரை-2020 திங்கட்கிழமை 18:10 மணி முதல் 19:00 வரை
அனைவருக்கும் இனிய  தமிழ் சித்திரை புதுவருட சார்வரி வருட நல்வாழ்த்துக்கள் 
வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீர் நீராடல் முக்கியமாக இடம்பெறும்

தமிழ் வருடப் பிறப்பன்றைய நீராடல் முக்கியமாக இடம்பெறும் மருத்து நீர்.
மருத்து நீர்அவை என்ன என்ன
சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை
சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம்
 செய்தாக வேண்டும்.
இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள்
• அஸ்வினி,கார்திகை 2ம் 3ம் 4ம் கால்கள் ரோகினி, மிருகசீரிஷம் 1ம் 2ம் கால்கள், மகம், பூராடம், உத்திராடம் 1ம் கால் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தலையில் வைத்து 
தேய்த்து நீராடல் வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




அருள் மிகு விநாயகபெருமானின் அவதார கதை

விநாயகர் பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. கணபதி என்ற சொல்லுக்கு தேவகணங்களின் தலைவன் என்று பொருள்.‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ 
என்றும் பொருள் கொள்ளலாம்.
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர் வந்தது. விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர்.சாபத்தின் காரணமாக தனது 
பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயக பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார்.
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு யாரும் இல்லாததால் தன் உடம்பில் பூசிய மஞ்சளை பிடித்து சிறுவனாக உயிர் கொடுத்து நிற்க சொன்னார்.அப்போது 
சிறுவனிடம் நான் குளிக்கப்போகிறேன். உள்ளே விட யாரையும் அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டார். அப்போது அங்கே சிவபெருமான் வந்தார். சிறுவன் சிவபெருமானை போக
 விடாமல் தடுத்தார்.இதனால் சிறுவனுக்கும், சிவபெருமானுக்கும் வாக்குவாதம் நடந்தது. இவ்வளவு சொல்லியும் என்னை உள்ளே விட மாட்டாயா என்று கோபமடைந்த சிவபெருமான் சிறுவனின் தலையை சூலத்தால் துண்டித்தார்.

பின்னர் பார்வதியின் மைந்தன் என் மகன் என்பதை அறிந்த சிவபெருமான் மிகவும் மன வேதனை அடைந்தார். காளியைச் சாந்தப்படுத்த முற்பட்டார் சிவன்.தனது பூதகணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு கட்டளையிட்டார். அதன்படி பூதகணங்கள் வடதிசை
நோக்கிச் சென்ற பொழுது அவர்கள் கண்ணில் முதலில் ஒரு யானை தென்பட்டது.அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை
வெட்டுண்டு கிடந்த சிறுவனின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார்.சிறுவன் உயிரெழுந்து பார்வதியை அம்மா என்று அழைத்ததும் பார்வதி சாந்தமடைந்து அகமகிழ்ந்தாள். சிறுவனை
 கட்டி அணைத்து
 முத்தம் கொடுத்தாள்.சிவன் அந்தப் பிள்ளைக்கு ‘கணேசன்’ என பெயர் சூட்டினார். தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும்.இந்த நிகழ்ச்சி நடந்தது
சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் விநாயகரை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி இந்து மக்களால் கெண்டாடப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா தியாகராஜா 01:04:20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2020.இன்று தனது இல்லத்தில் 
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
 வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமண நாள்வாழ்த்து திரு திருமதி வரதராஜா தவபாலன் 01:04:20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .வரதராஜா தவபாலன் (சனா சாந்தி) தம்பதிகளின் முப்பாதாவது  வருட திருமணநாள்  01.04.2020.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவர்களை 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 
 வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Powered by Blogger.