தரம் குறைந்த டீசல் பயன்பாட்டினால் இ.போ.ச விற்கு 60 லட்ச ரூபா நட்டம்

 
புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
நாட்டில் தரம் குறைந்த டீசல் பயன்பாட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 60 லட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சுமார் 250 வாகனங்கள் தரம் குறைந்த டீசல் பயன்பாட்டினால் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த பஸ்களுக்கு டீசல் பில்டர்களை புதிதாக போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பஸ்கள் பழுதடைந்த காரணத்தினால் வழமையான போக்குவரத்து சேவைகளை நடத்த முடியவில்லை.
பழுதடைந்தமை மற்றும் சேவையில் ஈடுபடுத்த முடியாமை ஆகியவற்றினால் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்கம தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.