இப்படி பஞ்சமுக விநாயகரை தொழுது வந்தால் சகல துன்பங்களும்னின் குமாம்

விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார்.விநாயகர் வழிபாட்டிற்கு 
எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார். அதுபோல ஒவ்வொருவரும் தமக்கு உகந்தவாறு விநாயகருக்கு பல பெயர்களை வைத்து அழைத்து கொள்கின்றனர். எங்கு 
வைத்து என்னை வணங்கினாலும், எந்த 
பெயரில் அழைத்தாலும் நான் அனைவருக்கும் வினை தீர்க்கும் விநாயகனாய் இருப்பேன் என்றே அவர் எண்ணம்.நாம் வணங்கும் விநாயகர்கள் பெரும்பாலும் ஒற்றை தலையுடன் தான் பார்த்து 
இருப்போம். ஆனால் சில ஆலயங்களில் ஐந்து முகத்துடன் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஒரு முகத்துடன் உள்ளபோதே எல்லா வினைகளையும் களைபவர் ஐந்து முகத்துடன் இருக்கும்போது பல மடங்கு அருள்மழை பொழிவார்.
ஹேரம்ப கணபதி எனும் பஞ்சமுக விநாயகர்:ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. 
தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.
ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. பசுமை கலந்த 
கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து
 இருப்பதே இவர் திருவுருவம். ஆயினும் இவ்வுருவ அமைப்பு ஆலயங்கள் தோறும் சற்று மாறுபடுகின்றன.
கஷ்டங்களை நீக்கும் ஹேரம்ப கணபதி:பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் ஏகாதசி திதியில் விவசாயம், வேளாண்மை, 
காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலைபுரிவோர் வணங்கிட சகல நன்மையும் பெறுவர். ஹேரம்ப விநாயகர் எனும் பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை காண்போம்.பஞ்சமுக 
விநாயகர் ஆலயங்கள்:சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம். ஒரே வரிசையில் ஐந்து 
தலையுடன் உள்ளார்.நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு 
செய்யலாம். நான்கு திசையில் தலையும், அதற்கு மேல் ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன் பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக 
ஹேரம்ப விநாயகர் அருள்புரிகிறார். திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின் பின்புறத்தின் ஐந்து
 முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் அருள்புரிகிறார். கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில் 10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி வரதராஜா .22.08.20


யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் லண்டனை   வசிப்பிடமாக உள்ள திருமதி  வரதராஜா  அவர்களின் 
பிறந்தநாள் 22.05.2020,இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்புப்  பிள்ளைகள், மருமக்கள்பேரப்பிள்ளைகள்  மாமா மாமி சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் 
இவ்யுறவை   நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று  நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் 
நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா 21-08-20

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிப்பிடமாகக்கொண்ட 
,திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா (வசந்தன்  ) அவர்களின்  பிறந்த நாள் .21.08..2020 .இன்று
  இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும் 
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

ஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இருக்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் 
இவை தான்:
வீடானது இருள் சூழ்ந்ததை போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டுமா என்னும் எண்ண ஓட்டம் ஏற்படும்.பூஜை பாத்திரங்களை எவ்வளவுதான் சுத்தமாக கழுவினாலும் இரண்டு நாட்களில் மங்கலாகத் தோற்றமளிக்கும் .தினமும் உணவு 
பொருட்கள் அதிகமாக வீணாகும் தன்மை ஏற்பட்டால் தெய்வீகத்தன்மை இல்லை என்பதை உணரலாம்.தண்ணீர் குழாய், மின்சார பொருட்கள் அடிக்கடி பழுதடையும்.
தெய்வம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:விபூதி,எலுமிச்சை,வேப்பிலை ,பூக்கள் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும்.பூஜைக்கு பயன்படுத்திய எலுமிச்சைப்பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகக்கூடாது.சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு 
வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும்.நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்னும் எண்ண ஓட்டம் மனதில் தோன்றும்.இதேபோன்று 
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள
 வேண்டிய தகவல்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.பெண்கள் கோலம் போடும்போது தெற்கு திசை பார்த்தபடி கோலம் போடக்கூடாது.திருமணம் ஆன பெண்கள் ஒரேயொரு விரலில் மட்டும்தான் மெட்டி அணியவேண்டும். இரண்டு,மூன்று விரல்களில் மெட்டி
 அணியக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள் உக்ரமான தெய்வங்கள் உள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது.பெண்கள் கிழக்கு திசை பார்த்தபடி குங்குமம் வைத்துக்கொள்ளவேண்டும்.அமாவாசை,தேவஷம் போன்ற நாட்களில் பெண்கள் வீட்டுவாசலில் கோலம் போடுவதை தவிர்க்கவேண்டும்.திருமணமான
 பெண்கள் மஞ்சள் கயிற்றில் மட்டுமே மாங்கல்யத்தை கோர்த்து அணியவேண்டும்.கோவில்களில் கொடுக்கும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.பெண்கள் முந்தானையை
 தொங்கவிட்டு நடக்கக்கூடாது.தலைக்கு குளிக்கும்போது 
பெண்கள் சிறிது மஞ்சளை முகத்தில் பூசி குளிக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பாவற்காயை சமைக்கக்கூடாது.அவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>





செல்வசந்நிதி முருகன் ஆலய கொடிஏற்றத் திருவிழா .ஆரம்பம்.19-08-20

 

 யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள
அன்னதானக் கந்தன் என 
அழைக்கப்படும் தொண்டமானாறு 
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 19-08-2020.இன்று  புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாக 
ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் பக்திபூர்வமாக 
இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01-09-2020. ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரதோற்சவம்  நடைபெறும்.
மறுநாள் .02-09-2020-.அன்று .தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
>>>>>>>>>>>???
மிக முக்கிய குறிப்பு>>>>>!!!
 உற்சவ தினங்களில் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்கள் தவறாது முகக்கவசம் அணிந்து வருவதோடு அடையாள அட்டையும் கொண்டு வரவேண்டும் என ஆலய நிர்வாகம்  கோரிக்கை 
விடுத்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

 



 

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி ஜெகதாசன் செந்துஜா 18-08-20


யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் லண்டனை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா (செந்தன் ) அவர்களின்  பிறந்த நாள் .18.08..2020 .இன்று
  இவரை அன்புக் கணவர் அன்பு மகன் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை நவக்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
 நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று  நோய் நொடிகளின்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத் திருவிழா .18.08.20

 

 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத் திருவிழாவைக்காண 
வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 18-.08.-2020 இன்று வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழாமிகச்சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்க  பக்தர்கள்
 வருகைதந்து.
எம்பெருமானை தரிசித்துச்சென்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20


 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 17-.08.-2020 இன்று குறிப்பிடத்தக்க  பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று ஆலயத்தில்  காணக்கூடியதாக உள்ளது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான 17-08-20.இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவவதை  
காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க 
வைக்கின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 


பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு திரு.கணவதிப்பிள்ளை இராசெந்திரம் 16.08.20

 

யாழ்.சரவணணையைப்  பிறப்பிடமகவும்  நவற்கிரி புத்தூரை வதிப்பிடமாகக்கொண்ட
 திரு கணவதிப்பிள்ளை இராசெந்திரம்  அவர்களின் பிறந்த நாள் .16.08.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக்கொண்டாடினார் 
இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் 
சகோதர்கள்  மருமக்கள்,பேரப்பிள்ளை மாமா மாமி  பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் 
 நல்லூர்முருகன் மற்றும் 
நவற்கிரி  அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



Powered by Blogger.